நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
தமிழில் ஒரு சில காமெடி நடிகர்களே காலம் கடந்தும் இன்னும் மனதில் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கவுண்டமணி. நாளை எத்தனை காமெடி வந்தாலும் சரி கவுண்டமணியின் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது. அதே போலத்தான் வடிவேலுவும், கவுண்டமணியின் தனியே திரையில் தோன்றினாலே சிரிப்பலைக்கு பஞ்சம் இருக்காது. இன்றும் கூட பல இடங்களில் இந்த ஜோடியின் காமெடிகள் வைரலாக இருந்து வருகிறது.

ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்போதும் கூட நடிக்க அவர் தயாராகத்தான் இருக்கேன் எனது உடல் ஒத்துழைக்க வேண்டும் என சில மேடைகளில் கூறி இருந்தார்.

அழகு மணியை ஞாபகம் இருக்கா
அந்த வகையில் சத்யராஜ் – கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது. இதனாலேயே சத்யராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியை தனது காமெடி ஜோடியாக கமிட் செய்து விடுவார். அப்படி பல வெற்றி படங்களில் ஒன்றாக வெளியானது தான் மகுடம், இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் என இருவரும் சேர்ந்து கலக்கி இருப்பார்கள், இந்த படத்தில் கவுண்டமணிக்கு நடிகை சரோஜா தேவியின் புகை படத்தை கட்டி தனது தங்கச்சி அழகுமணியை செந்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்.

அந்த காமெடியில் எதுமே பேசாமல் கடைசியாக மாமா என்று ஒற்றை வார்த்தை மட்டும் கூறும் அந்த அழகுமணியாக நடித்த நடிகை அப்போதே நல்ல பிரபலம் தான். ஆனால் 43வயதிளும் இன்னும் அழகாவே தான் இருக்கிறார். உண்மையிலேயே அவரின் பெயர் அழகுமணி தான் டீச்சராக பணியாற்றி வந்த அவர் இப்ப்போது எந்த வேலைக்கும் செல்லாமல் தனது குடும்பத்துடன் ஜாலியாக பொழுதினை கழித்து வருகிறார்.
